27 மாநிலங்களுக்கு ரூ.9,880 கோடி கடன்: சுயசார்பு திட்டத்தில் வழங்க மத்திய அரசு முடிவு
ஞாயிறு, 13 டிசம்பர், 2020
சுயசார்பு பாரதம் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் 27 மாநிலங்களுக்கு ரூ.9,880 கோடி கடனாகவழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு தனது இரண்டாம் கட்ட நிதி ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்தது. அதில் சுயசார்பு பாரதம் திட்டத்தின் செயல்பாடுகளுக்காக மாநிலங்களுக்கு ரூ.12,000 கோடி கடன் வழங்க உள்ளதாக அறிவித்தது. இந்த கடன் வட்டி இல்லாத 50 ஆண்டுகளுக்கான கடனாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/611287-aatma-nirbhar-bharat.html?frm=rss_more_article