10 லட்சம் ஆலோசனைகளை வழங்கிய இ-சஞ்ஜீவனி: தமிழகம் தொடர்ந்து முதலிடம்
செவ்வாய், 15 டிசம்பர், 2020
இ-சஞ்ஜீவனி தொலை தொடர்பு மருத்துவ சேவை, ஆலோசனை வழங்குவதில் 10 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்துவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இணையதளம் மூலம் வழங்கப்படும் தொலை தொடர்பு மருத்துவ சேவை, சுகாதார சேவைகளின் அளவை மட்டும் விரிவுபடுத்தாமல், சுகாதார சேவைகளின் தரத்தையும் மேம்படுத்தி, பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. இ-சஞ்ஜீவனி என்ற பெயரில், இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் தொலை தொடர்பு மருத்துவ சேவை வழங்கப்பட்டது. கொவிட்-19 நேரத்தில், மக்கள் வெளியே செல்ல முடியாத நேரத்தில் இத்திட்டம், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. டிஜிட்டல் சுகாதார சூழலையும் ஊக்குவித்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/611910-esanjeevani.html?frm=rss_more_article