'பாஜக ஆட்சியில் சிபிஐ நிலைமை பான் மசாலாக் கடை போல் ஆகிவிட்டது': மகாராஷ்டிரா அமைச்சர் சாடல்
வெள்ளி, 20 நவம்பர், 2020
பாஜக ஆட்சியில் சிபிஐ நிலைமை பான் மசாலாக் கடை போல் ஆகிவிட்டது என மகாராஷ்டிரா அமைச்சர் அஸ்லாம் ஷேக் விமர்சித்துள்ளார்.
முன்னதாக நேற்று, மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் சிபிஐ விசாரணை நடத்தும்போது சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதல் கண்டிப்பாகத் தேவை. ஒப்புதல் இல்லாமல் விசாரணை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், பி.ஆர்.காவே ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பினை வழங்கியது.
source https://www.hindutamil.in/news/india/603382-cbi-has-become-pan-shop-under-bjp-govt-says-maharashtra-minister.html?frm=rss_more_article