சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க கேரள செய்தியாளர் சித்திக் முயற்சி: ஹாத்ரஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு விளக்கம்
சனி, 21 நவம்பர், 2020
உத்தரபிரதேசத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க கேரளசெய்தியாளர் சித்திக் முயற்சி செய்தார் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ்மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றகேரளாவை சேர்ந்த சித்திக் காப்பன் (41) கடந்த அக்டோபர்5-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனிடையே கேரள செய்தியாளர்கள் சங்கம் (கேயுடபிள்யூஜே) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
source https://www.hindutamil.in/news/india/603722-journalist-siddiq.html?frm=rss_more_article