காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு எதிரொலி: நிரந்தர தலைவரை தேர்வு செய்ய கட்சி தலைமைக்கு நெருக்கடி
சனி, 28 நவம்பர், 2020
காங்கிரஸ் கட்சிக்கு பக்க பலமாக இருந்த மூத்த தலைவர் அகமது படேலின் மறைவு, அக்கட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளது. பிரச்சினைகளை சமாளிக்க ஆளில்லாமையால் நிரந்தர தலைவரை தேர்வு செய்ய தலைமைக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.
கடந்த வருடம் நடந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் பல்வேறு சிக்கல்களுக்கு காங்கிரஸ் கட்சி உள்ளாகி வருகிறது. இதில், காந்தி குடும்பத்தாருக்கும் தேசிய தலைவர்களுக்கும் இடையில் இருந்த பிரச்சினைகளை சமாளித்து வந்தார் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அகமது படேல். இவரது மறைவால் கட்சியில் பிரச்சினைகளை சமாளிக்க ஆளில்லாத நிலை உருவாகி உள்ளது.
source https://www.hindutamil.in/news/india/606071-ahamed-patel-demise.html?frm=rss_more_article